Thursday, September 21, 2023

 

உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க.

தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இப்ப ஒரு சின்ன அறிமுகம் தரேன் தெரிஞ்சுக்கோங்க.
சிவயோகி ந்னு ஒரு யோகி, அகத்தியரைப் பார்க்கப்போயிட்டிருந்தாராம். வழியில, ஒரு ஊர்ல மாடு, ஆடுகள் எல்லாம் அழுகறதைப் பார்த்தாரு. :ஏன் அழுவுறீங்கப்பா” ன்னு அதுக கிட்ட கேட்டா, அதுக, அங்க ஒரு ஆள் படுத்துக்கிடந்ததக் காட்டினதுகளாம். மாடுகளை மேய்ச்சிட்டு வந்த இடையன் செத்துக் கிடந்தாரு. இவருக்கு, ரொம்ப கஷ்டமாப் போச்சு. சரி, பாவம் மாடுக, கன்னுகுட்டிக, ஆடுகள், இதுகளுக்காக ஏதாவது செய்யணும்னு “நாம யோகத்தால, இவன் சரீரத்துக்குள்ள கூடு விட்டு கூடு பாய்ந்து, இவனைப்போல இன்னிக்கு ஒரு நாளைக்கு சமாளிப்போம்” னு, தன் உடலை ஒரு புதர்ல மறைச்சு வச்சுட்டு, அந்த இடையன் உடல்ல புகுந்துகிட்டாராம். அவன் பேர் மூலன்.
வேலை முடிஞ்சு மாடுகள் எல்லாம், அதனது வீட்டுக்கு போனதும், போய் தன் உடல்ல புகுந்துக்கலாம்னு பார்த்தா, அதை ஏதோ ஒரு மிருகம் தின்னுபுட்டு போயிடுச்சாம். அப்புறம் வேற வழியில்லாம அந்த உடம்போடயே இருந்துட்டாரு. யோக நிலையிலயே இருந்தாருன்னு புரிஞ்சுகிட்டு, அவர அந்த ஊர்காரங்களும் தொந்தரவு பண்ணல. அந்த இடையன் மனைவி பஞ்சாயத்துல கேட்டதுக்கும் அவங்க விட்டுடச் சொல்லிட்டாங்க.
அப்புறம் அவரு திருவாவடுதுறை போய் தவம் இருந்து …..
இங்கதான் விஷயமே! ஆண்டுக்கு ஒரு பாட்டுன்னு மூவாயிரம் பாட்டு எழுதினாருன்னு சேக்கிழாரும் சொல்றாரு, எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ரொம்ப ஸ்னஹ்தேகம். அதெப்படி, முன்னாடி எழுதின பாட்டுமே மறந்துடுமே வருஷம் ஒரு பாட்டு எழுதினா? யாரு எழுதிப்பா? சொல்லிட்டு சமாதிக்கு போயிட்டா, மூவாயிரம் வருஷம் எப்படி தொடர்ச்சி இருக்கும்னெல்லாம் குழப்பமா இருந்துது.
இப்பதன அதுக்கு விடை கிடைச்சது. கிடைச்சதும் உங்களுக்கும் சொல்ல வந்துட்டேன்.
அதாவது, அவரு யோகி இல்ல, அவங்களுக்கு ஒரு மூச்சுங்கறது ஒரு நாளாம். உள்ள இழுக்கற மூச்சு இரவாம்; வெளிய விடற மூச்சு பகலாம். முப்பது மூச்சு ஒரு மாசம், 360 மூச்சு ஒரு வருஷம். ஒரு மூச்சுக்கு நான்கு வினாடிகள். இதுபடி பார்த்தால், 360 மூச்சுக்கு 24 நிமிடங்கள் ஆகும். ஆழ்ந்த த்யானத்தில் 24 நிமிடங்க்ள் இருந்து பிறகு விழித்து, த்யானத்தில் உணர்ந்ததை ஒரு பாடலாப் பாடுவாராம்.
இப்படித்தான் 3000 பாடல்களும் பாடினாராம்.
என் சந்தேகம் தீர்ந்தது. உங்களுக்கும் சிலபேருக்கு இப்படி சந்தேகம் இருந்திருக்கும் இல்ல? இப்ப தீர்ந்திருக்கும்.
வாசித்ததற்கு நன்றி
உஷா சங்கரநாராயணன்.

No comments:

Post a Comment

  உங்களுக்கெல்லாம் திருமூலர் தெரியுமா? தெரிஞ்சா ஆறாவது பாராலேர்ந்து மட்டும் படிங்க. தமிழ்ல மூவாயிரம் பாட்டு எழுதினவர். அவர் கதை சில பேருக்கு...